Sunday, December 25, 2011
உணவு பொட்டலமிடுதல் சட்டம்
இந்த வருடத்தில் இருந்து உணவு கலப்படம் மற்றும் பொட்டலமிடுதல் சட்டத்தை மத்திய அரசாங்கம் தன் கையில் எடுத்துள்ளது. குடிசைத்தொழிலாக இருக்கும் சில உணவு பண்டங்களையும் பன்னாட்டு உணவு பண்டங்களை போலவே பொட்டலமிடுவதர்க்கும் கையாளும்படிக்கும் விதிமுறைகள் உள்ளன. இது நம் நாட்டு மக்களின் இயல்புக்கும் வியாபார நடைமுறைக்கும் எதிரானதாக உள்ளது. பன்னாட்டு வியாபாரிகளுக்கு உதவும்படியே இந்த சட்டம் உள்ளது. இந்த சட்டத்தின்படி அதிகாரம் பெற்றுள்ள அதிகாரிகள் கையூட்டு பெறுவதற்கு நல்வாய்ப்பாக உள்ளது.
Tuesday, May 31, 2011
கனிமொழி காவியம்
கனிமொழி ஈழத்திர்க்காகவும் தமிழக மீனவர்களுக்காகவும் போராடியா சிறைக்கு போனார்? கருணாநிதியின் குடும்பத்தினர் அவரை சிறையில் சென்று பார்த்த சோக கதைகளை விகடனில் படித்தபோது சந்தேகமாக இருந்தது . ஆனாலும் அவர்களெல்லாம் கஷ்டப்படுவதாக படித்தபோது மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது . விகடன் எதற்கும் ஜாக்கிரதையாக இதை கையாள வேண்டும் . இதுவே அவர்களுக்கு மக்கள் மத்தியில் பரிதாப அலையை ஏற்படுத்தி விடும் . நம்முடைய மக்களையும் நம்ப முடியாது
Saturday, May 28, 2011
பள்ளிக்கல்வியில் அரசியல் விளையாட்டு
சமசீர் கல்வி வருமா வராதா. இதுலகூடவா அரசியல் விளையாடனும். பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்தால் பயமாக இருக்கிறது .
Sunday, May 15, 2011
தமிழ் நாடு தேர்தல் முடிவு
தமிழ்நாட்டு மக்கள் ஏதோ அதிமுக ஆட்சிக்காக வாக்களித்திருப்பதாக தலைமை நினைக்கலாம் ஆனால் அவர்கள் திமுக ஆட்சிக்கு எதிராகத்தான் வாக்களித்திருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணரவேண்டும்
Friday, April 8, 2011
அன்னா ஹஜாரே
அன்னா ஹஜாரேக்கு பின்நின்று ஆதரவு கொடுக்கும் இந்தியர்களை நம்பலாமா . எகிப்த நாட்டினைப்போல இங்கும் போராட்டம் வலுக்குமா அல்லது இதுவும் கடந்து போகுமா
Saturday, March 19, 2011
பக்தி தொடர்கள்
இன்றைய தேதியில் நாத்திகர்களை விட தொல்லைக்காட்சியில் வரும் பக்தித்தொடர்களே இந்து புராணங்களை அதிகமாக கிண்டல் செய்கின்றன
Friday, March 18, 2011
தமிழகத்தில் அவசரநிலை
தேர்தல் கமிஷனின் கெடுபிடி லஞ்சம் வாங்குபவருக்கு நல்வாய்ப்பாக அமைந்துவிட்டது . கையில் சிறிது பணமிருந்தாலும் விடுவதில்லை , உதாரணமாக திருமணத்திற்கு நகைகள் துணிமணிகள் வாங்கச்செல்லும் பொதுமக்கள் அத்தாட்சி வைத்துக்கொண்டா அலைய முடியும் ? அதிகாரியை கவனிக்கிறாயா இல்லை அரசாங்கத்திற்கு கொடுக்கிறாயா என்று சிறிதும் இறக்கம் இன்றி வசூல் நடக்கிறது . என்ன மாதிரியான அத்தாட்சி என்றும் தெளிவு செய்ய வில்லை . அரசியல் கட்சிகளும் தேர்தல் மும்முரத்தில் இதையெல்லாம் கவனிப்பதுமில்லை (இல்லன்னாமட்டும்) . இப்பொழுது அரசியல் கட்சிகளை விட தேர்தல் கமிஷன் மீது தான் வெறுப்பாக உள்ளது . என்னை பொறுத்தவரை என்னுடைய எதிர்ப்பை காட்டும்விதமாக இந்த தேர்தலை பகிஷ்கரிக்கப்போகிரேன் . தமிழர்களை என்ன செய்தாலும் ஒன்றும் எதிர்க்கமாட்டார்கள் என்ற மனப்போக்கை நாம் ஒற்றுமையாக இருந்து அவர்களுக்கு காட்டவேண்டும் . இணையம் மூலமாகத்தான் எகிப்த போராட்டம் வெடித்தது . நம்முடைய இணைய பதிவாளர்கள் ஏதாவது செய்வார்களா ? சும்மா வெட்டித்தனமாக அரட்டை அடிக்காமல் உருப்படியாக ஏதாவது செய்தால் நல்லது
Wednesday, January 19, 2011
பயமாயிருக்கு
என் அண்ணனுக்கு நெஞ்சு வலிப்பது போல இருந்ததால மருத்துவமனை போனோம் இதயத்தில் பிரச்சினை இருப்பதாக சொல்லி ஐந்து நாள் மருத்துவம் செய்தார்கள் . வெறும் வாயு பிடிப்பாக இருக்கலாம் என்று அவருக்கு சந்தேகம் . நம்பிக்கை இழப்பதில் அரசியல் வாதிக்கு அடுத்த இடத்தில் மருத்துவர்கள் இருக்கிறார்கள்
Subscribe to:
Comments (Atom)