தமிழக அரசு பயறு வகை வளர்ச்சிக்காக தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகத்தின் பயறு அதிசயம் என்னும் மருந்தினை பரிந்துரை செய்துள்ளது . ஆனால் விவசாயத்திற்கு முழுமுதல் தேவையான நீர் பாசன வசதிக்கு எந்த ஒரு திட்டமும் செயல்படுவதாக தெரியவில்லை . இப்பொழுது கூட முல்லை பெரியாறு அணையில் நீரை சேமிக்காமல் தமிழகத்தின் பால் திருப்பிவிட்டு இங்கிருக்கும் நதிகளிலும் ஏரிகளிலும் தடுப்பணைகள் கட்டி சேமிக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது . இருக்கும் ஏரிகளையும் கால்வாய்களையும் மற்றுமுள்ள நீராதாரங்களையும் தூர்வாரி பராமரித்தாலே நம்முடைய பாசன வசதிகளை பெருக்கிக்கொள்ளலாம் . நீராதாரங்களை மேம்படுத்தாமல் மருந்தும் மானியமும் எந்த அதிசயமும் செய்யாது .